இந்தியா
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் தற்கொலை!
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சராக பணியாற்றியவர் ராஜேந்திர பகுகுணா. இவர் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. மறைந்த அமைச்சர் ராஜேந்திர குமார் வயது 59 ஆகும்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குமார் தனது பேத்தியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியதாக அவரது மருமகள் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்வதற்காக வீட்டுக்கு வந்தனர்.
இதனையறிந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா, வீட்டின் மேல்மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.
இருப்பினும் போலீஸார் கைது செய்ய முயற்சித்த போது அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.