இந்தியா
அம்பேத்கார் பெயர் வைத்ததால் ஆத்திரம்: அமைச்சரின் வீட்டையே கொளுத்திய பொதுமக்கள்!
புதிதாக ஏற்படுத்தப்பட்ட மாவட்டத்திற்கு அம்பேத்காரின் பெயர் வைத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் என்று பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு அமலாபுரம் என்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென அம்பேத்கார் பெயர் வைத்ததற்கு அமலாபுரம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரம் என்ற பகுதி மக்கள் நடத்திய இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. இதையடுத்து ஆந்திர மாநில அமைச்சர் ஒருவரின் வீட்டிற்கும் எம்எல்ஏ ஒருவரின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்முறை நடந்த அமலாபுரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.