தமிழ்நாடு
18 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகிறது கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எனவே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்