இந்தியா
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் நீட்டிப்பு
2022 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத நேற்று முன்தினம் அதாவது மே 14ம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடித்துள்ளது.
இதன்படி மே 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில் இன்னும் கால அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதால் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது .
2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.