சினிமா செய்திகள்
ரஜினியால் கோடிக்கணக்கில் நஷ்டம்: கடும் கோபத்தில் சிரஞ்சீவி
ரஜினியால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என சிரஞ்சீவி தரப்பு புலம்பி வருவதாக ஆந்திர திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு சிரஞ்சீவிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதனால் நஷ்ட ஈடு கொடுக்கலாமா? அல்லது பேசி சமாளிக்கலாமா? என சிரஞ்சீவி தரப்பு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி விநியோகஸ்தர்கள் சிரஞ்சீவியை நேரில் சந்தித்து கோலிவுட்டில் ரஜினிகாந்த் படம் தோல்வி அடைந்தால் விநியோகிஸ்தர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் நஷ்ட ஈடு கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் என்றும் அவரது நண்பரான நீங்களும் அதே கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ரஜினி நஷ்ட ஈடு கொடுத்ததால்தான் தானும் கோடிக்கணக்கில் தற்போது நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரஜினி மீது சிரஞ்சீவி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.