தமிழ்நாடு
12ஆம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டுக்கு வந்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை!
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்ற நிலையில் மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஹேமாவதி என்ற தனியார் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவியும் தேர்வு எழுதினார்.
தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த மாணவி திடீரென தனது அறையின் உள்ளே தாள் போட்டுவிட்டு தூக்கில் தொங்கி தூங்கிவிட்டார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரது உடலை கீழே இறக்கி பார்த்த போது ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவியின் தற்கொலைக்கு இதுவரை என்ன காரணம் என்று தெரியவில்லை.
தேர்வு சரியாக எழுதவில்லையா? தேர்வு கடினமாக இருந்ததா? அல்லது அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.