தமிழ்நாடு
திமுக ஆட்சி மீது திருமாவளவன், திக அதிருப்தியா?
திமுக ஆட்சியை தொடங்கி ஒரு ஆண்டு முடிந்ததை அடுத்து திமுக ஆட்சியின் சாதனைகள் அடுக்கடுக்காக வீடியோக்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் பொதுக்கூட்டங்கள் மூலம் விளக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
ஆனால் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளே இந்த ஓராண்டு ஆட்சியில் அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிகிறது. திமுக ஆட்சியை ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவில்லை என்ற அதிருப்தி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
பழைய பென்சன் திட்டம் குறித்து அமைச்சர்கள் கூறும்போது படிப்படியாகத்தான் அந்த திட்டத்தை அமல்படுத்த முடியும் என்று கூறியதும் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. அது மட்டுமின்றி ஆன்மீக விஷயத்தில் திமுக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருசிலரை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக ஒருசில ஆன்மீக நடவடிக்கை எடுத்து கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் அவரை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு திமுக கூட்டணியில் உள்ளவர்களே திமுக ஆட்சி மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.