தமிழ்நாடு
தாலிச்சங்கிலியை பறித்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த திருடன்: கன்னியாகுமரி அருகே சம்பவம்
காலை 5 மணிக்கு தக்கலை அருகே பெண்ணிடத்தில் நகையை பறித்துச் சென்ற திருடன் 6:30 மணி அளவில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்தவர் நட்சத்திரா பிரேமிகா என்ற 39 வயதான பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் இன்று காலை 5 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து தப்பினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நட்சத்திரா பிரேமிகா, படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி.ல் இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்த்தாகவும் இன்னொருவர் ட்ட படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
படுகாயத்துடன் மீட்கப்பட்டவரிடம் அறுந்த தங்க சங்கிலி ஒன்று இருப்பதை கண்ட திருவனந்தபுரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து குமரியில் நட்சத்திரா பிரேமிகாவின் தாலி சங்கிலியை பறித்து கேரளாவுக்கு தப்பிய நிலையில் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 11 சவரன் தாலிச் சங்கிலியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.