தமிழ்நாடு
ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்!
ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்!
சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் அரசு நிலத்தில் கடந்த 63 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழும் மக்கள் ஆக்கிரமித்து குடியிருந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி அவர்களை காலி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வீடுகளை இடிக்கும் போது பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினார் .
இந்த நிலை தனது வீட்டை வீடு இடிக்கப்படுவதை அறிந்த கன்னையா என்ற 60 வயது முதியவர் தற்கொலைக்கு முயன்றார். தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்த உறவினர்கள் காப்பாற்றி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.