இந்தியா
முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த தலித் வாலிபர் வெட்டி கொலை: தெலுங்கானாவில் பதற்றம்
இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தலித் வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே தலித் வாலிபர் நாகராஜ் என்பவர் இஸ்லாமிய பெண்ணான அஸ்ரின் சுல்தானா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .
இந்த நிலையில் நாகராஜன் குடும்பத்தினர் சமாதானமாகி இந்த தம்பதியை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அஸ்ரின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக அரிவாலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் நாகராஜன் உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறும்போது நாகராஜின் மனைவி குடும்பத்தினரிடம் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் கொலையாளி யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதி அடுத்தே போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.