தமிழ்நாடு
கோடை வெப்பம் எதிரொலி: பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை
தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
கோடை காலம் தொடங்கி நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கும் நிலையில் வழக்கத்தை விட மிக அதிகமாக தற்போது வெப்பம் காணப்படுகிறது
பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்து வருவதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லவும் பள்ளியிலிருந்து திரும்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்
இந்த நிலையில் கடும் வெப்பத்தை கணக்கில் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே விட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி நிலையில் இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்றைய பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி பள்ளிகளை திறப்பதா அல்லது மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.