தமிழ்நாடு
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி கண்டனத்திற்குரியது, ஆனால்.. ப.சிதம்பரம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனைக்குரியது என்றாலும் டீன் மீதான நடவடிக்கை தேவையற்றது என்ற ரீதியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார்
நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இணையதளங்களில் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், ‘மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது கண்டனத்துக்குரியது, இதை கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்
ஆனால் அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு தெரியாமல் இந்த பிழை நடந்து இருந்தால் அவரை பொறுப்பாக கூடாது என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்
மேலும் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்னவேல் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்