கிரிக்கெட்
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: பிளே ஆஃப் செல்லுமா சிஎஸ்கே?
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய 181 ரன்கள் அடித்து உள்ளனர். இந்த நிலையில் இந்த சாதனையை நேற்று ருத்ராஜ் மற்றும் கான்வே முறியடித்துள்ளனர்.
நேற்று இருவரும் இணைந்து 182 ரன்கள் எடுத்தனர் என்பதும், சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் 99 ரன்களும், கான்வே 85 ரன்களும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் எடுத்து சாதனை புரிந்த ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் இனிவரும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதல் நான்கு இடங்களில் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.