இந்தியா
கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை இன்று முதல் 102 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து உள்ளதாகவும் இதனை அடுத்து சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2355. 50 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே பால், பெட்ரோ,ல் டீசல் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்கள் மற்றும் டீ கடைகளில் டீ, காபி விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கேஸ் விலை மேலும் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதால் மீண்டும் விலையேறும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .
ஆனால் அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்வு இல்லை என்பது பொது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.