தமிழ்நாடு
12ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞன்: செம கவனிப்பு கொடுத்த பொதுமக்கள்!
பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பொதுமக்கள் செம கவனிப்பு கவனித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த இளைஞனின் காதலை ஏற்காத மாணவியை திடீரென்று பள்ளி செல்லும்போது வழிமறித்து அவரை கத்தியால் சரமாரியாக இளைஞர் குத்தினார். இதை அந்த பகுதியில் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் இளைஞனைப் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதுமட்டுமின்றி மாணவியை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக இளைஞன் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இளைஞன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.