சினிமா செய்திகள்
’காத்துவாக்குல காதில் பூ சுற்றும் வசூல் கணக்கு: ரசிகர்கள் கண்டனம்
விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7 கோடியும், உலகம் முழுவதும் 12 கோடியும் வசூல் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பதிவு செய்து வருகின்றனர் .
ஆனால் முதல் நாளே பல தியேட்டர்களில் பாதிகூட நிரம்பவில்லை என்றும், நான்கு மணி காட்சிகள் போட்ட தியேட்டர்களில் மட்டுமே கூட்டம் இருந்தது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் வேண்டுமென்றே வசூல் கணக்குகளை அதிகரித்து காட்டும் டுவிட்டர் பயனாளிகள் தான் இந்தப் படம் முதல் நாளில் 12 கோடி வரை வசூல் செய்வதாக விளம்பரம் செய்து வருகின்றனர் .
தமிழகத்தில் மட்டும் 7 கோடி என காதில் பூ சுற்றும் இந்த நபர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது போன்ற போலியான வசூல் செய்திகளை பரவி போலியான வெற்றி விழாவை கொண்டாடுவது எப்போது நிறுத்தப்படுகிறதோ, அப்போதுதான் தமிழ் சினிமா உருப்படும் என்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் நேற்றைய உண்மையான வசூல் தமிழகத்தில் ஒரு கோடி முதல் இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.