தமிழ்நாடு
பான் எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ரூ.1 லட்சத்தை இழந்த நபர்!
பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் பான் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க விட்டால் வங்கி கணக்கு செயல்பட முடியாமல் போய்விடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலோர் பான் எண்களை ஏற்கனவே இணைத்து விட்டனர் என்பதும் ஒரு சிலர் இணைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் புதுவை சீனிவாசன் என்பவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் உங்களுடைய பான் எண் வங்கி கணக்குடன் இணைக்க வில்லை என்றும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் பான் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்குடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது .
இதனை நம்பி அவர் லிங்கை ஓபன் செய்து தனது பான் எண்ணை பதிவு செய்தார் ஆனால் அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் மாயமானது.
இதனை அடுத்து அவர் போலீசாரிடம் அளித்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.