தமிழ்நாடு
கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர!
சென்னை: கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர் திமுக மீது விமர்சனங்களை வைத்தார்.
அதில், கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. இத்தனை நாட்களாக இது குறித்து ஏன் எந்த பிரச்சனையும் வரவில்லை. கொடநாடு விவகாரம் இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன.
கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இதற்கு பின் யாரு இருக்கிறார்கள். இதன் பின்னணியில் யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.