இந்தியா
31 பைசா கடன் பாக்கிக்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி: நீதிபதி கண்டனம்
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த நிலத்தை விற்க முடிவு செய்ததால் கடனை முழுவதுமாக திருப்பினார்.
கடன் கட்டிய பிறகு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வங்கியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் வங்கி நிர்வாகம் இன்னும் நீங்கள் முப்பத்தி ஒரு பைசா கடன் பாக்கி வைத்து உள்ளீர்கள் என்றும், அதனை காட்டினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்க முடியும் என்றும் கூறினார்.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது விவசாயி தன்னுடைய கடனை முழுமையாக கட்டி விட்டாலும் கம்ப்யூட்டரில் 31 பைசா கடன் பாக்கி இருப்பதாக காண்பிக்கிறது என்பதால் தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர் .
இதற்கு நீதிபதி 50 பைசாவுக்கு கீழான கடன் பாக்கியை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படை கூட உங்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி ஒரு விவசாயியை துன்புறுத்துகிறீர்கள் என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக வங்கி மேலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு மே இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.