தமிழ்நாடு
மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையா? ஊருக்கு போக தயாராகும் பொதுமக்கள்!
சமீபத்தில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்த நிலையில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே ஏப்ரல் 30, மே 1 மற்றும் மே 3 ஆகிய தினங்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”
இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.