தமிழ்நாடு
உலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப்பெண்?.. இந்திரா நூயிக்கு அழைப்பு!
சென்னை: உலக வங்கியின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் பணியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த பதவிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக்கு பின் சில நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படும். அதன்பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிலிருந்து ஒரு நபரை தலைவர் பதவிக்கு தேர்வு செய்வார்.