இந்தியா
ப்ரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடிக்கு ஓவியம் வாங்கினேன்: கைதான யெஸ் பேங்க் இணை நிறுவனர் வாக்குமூலம்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஓவியர் எம்.எப். ஹூசைன் வரைந்த ஓவியங்களை பிரியங்கா காந்தி வைத்திருந்தார் என்றும் அந்த ஓவியத்தை வாங்க தான் கட்டாயப்படுத்த பட்டதாகவும் வேறு வழியில்லாமல் ரூபாய் 2 கோடி கொடுத்து அந்த ஓவியத்தை பிரியங்கா காந்தியிடம் இருந்து வாங்கியதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .
மேலும் தான் கொடுத்த 2 கோடி ரூபாயை வைத்து தான் சோனியா காந்திக்கு நியூயார்க்கில் மருத்துவச் செலவு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார் ரூபாய் 2 கோடி ஓவியம் வாங்க பிரியங்கா காந்தி தரப்பிலிருந்து கட்டாய படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை இடம் யெஸ் பேங்க் வங்கியின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.