தமிழ்நாடு
சென்னை ஐஐடி கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு: சுகாதார செயலர் அதிரடி உத்தரவு
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ள நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது அது 55 ஆக உயர்ந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் முப்பது பேர்களுக்கு கூற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு இலேசாக அறிகுறி மட்டும் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.