சினிமா செய்திகள்
உசுப்பேத்திய காஜல் அகர்வாலுக்கு ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என எச்சரித்த சமந்தா
நடிகை சமந்தாவை நடிகை காஜல் அகர்வால் உசுப்பேற்றி நிலையில் அவருக்கு பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என சமந்தா எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது. அவருக்கு சக நடிகைகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சமந்தாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு விரைவில் உங்கள் குழந்தையை பார்க்க வருகிறேன் என்று கூறுகின்றார். அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் ’நன்றி ஆண்டி உங்களை பார்க்க ஆவலுடன் உள்ளேன்’ என்று கூறியுள்ளார் .
தன்னை விட வயது அதிகம் ஆன காஜல்அகர்வால் தன்னை ஆன்ட்டி என்று கூறியதை அடுத்து சமந்தா செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமந்தாவை கேலி செய்து பல மீம்ஸ்களும் வருகின்றன.
இந்த நிலையில் சமந்தா ரசிகர்கள் காஜல் அகர்வாலை திட்டி தீர்த்து வருகின்றனர் இதனை அடுத்து தான் காஜல் அகர்வாலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடும் வகையில் சமந்தா ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
Kindness can have an expiry date ☺️#JustSaying https://t.co/UDc40uaLpv
— Samantha (@Samanthaprabhu2) April 22, 2022
என்னுடைய மௌனத்தை, அறியாமை என தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அமைதியாக இருந்ததால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன் என்று அர்த்தமில்லை என்றும் என் அன்பை பலவீனமாக யாரும் நினைக்காதீர்கள் என்றும் எனது கருணைக்கும் ஒரு காலாவதி உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு காஜல்அகர்வாலுக்குதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.