சினிமா செய்திகள்
கேஜிஎப் இளைஞர்களை கெடுக்கும், தமிழ் சினிமா போல் படம் எடுங்கள்: முன்னாள் பெங்களூரு கமிஷனர்!
கேஜிஎப் போன்ற படங்கள் இளைஞர்களை கெடுக்கும் என்றும் தமிழ், மலையாள சினிமாக்கள் போன்ற கருத்தாழமிக்க படங்களை எடுங்கள் என்றும் முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு ஹீரோ டானாக நடித்தால் அந்த படத்தை இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்றும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பில்லா, பாட்ஷா முதல் பல டான் படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்து உள்ளது .
இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பெங்களூரு காவல்துறை கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். ரவுடிகள் மற்றும் கேங்க்ஸ்டரை ஹீரோவாக காட்டும் படங்களை சினிமா இயக்குநர்கள் கைவிட வேண்டும் என்றும் இது இளைஞர்கள் மனதில் விஷத்தை வளர்க்கும் என்றும் கூறினார்.
வெறும் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என்று இயக்குனர் நினைக்காமல் தமிழ் சினிமா, மலையாள சினிமா போன்று நல்ல கருத்துள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நல்ல சிந்தனை உள்ள இளைஞர்கள் உருவாகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.