இந்தியா
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 2வது டோஸ் செலுத்தாதது தான் காரணமா?
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பெரும்பாலானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாததே காரணம் என்றும் தமிழகத்தில் மட்டும் 1.4 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 54 லட்சம் பேர் முதல் தடுப்பூசியே இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்று உலக சுகாதார மையம் அறிவித்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் காட்டிய மெத்தனம் தான் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.