Connect with us

இந்தியா

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 2வது டோஸ் செலுத்தாதது தான் காரணமா?

Published

on

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து ஊரடங்கு உள்பட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உத்தரபிரதேசம், அரியானா, டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பெரும்பாலானோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாததே காரணம் என்றும் தமிழகத்தில் மட்டும் 1.4 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 54 லட்சம் பேர் முதல் தடுப்பூசியே இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி தான் என்று உலக சுகாதார மையம் அறிவித்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் காட்டிய மெத்தனம் தான் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.

 

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!