சினிமா செய்திகள்
‘பீஸ்ட்’ நாளை ரிலீஸ் இல்லை: தமிழக முக்கிய நகரத்தின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தகவல்
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரில் மட்டும் நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளை பிரமாண்டமாக ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான முன்பதிவுகளும் முடிந்துவிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கரூரில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கரூரில் மட்டும் நாளை ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் விதிமுறையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் ‘பீஸ்ட்’ படத்தை திரையிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்
இருப்பினும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டால் நாளை கரூரில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ‘பீஸ்ட்’ திரைப்படம் கரூரில் நாளை ரிலீஸ் ஆகவில்லை என்றால் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று ‘பீஸ்ட்’ திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.