இந்தியா
சூப்பர் செய்தி.. சென்னையில் உற்பத்தியாகும் ஆப்பிள் ஐபோன் 13!
ஆடம்பர ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் இந்தியாவில், அதுவும் நாம்ம சென்னையில் ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகின் மிகவும் ஆடம்பர விலை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் ஆப்பிள். இந்த நிறுவனத்திற்காக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் மொபைல் தொழிற்சாலை ஐபோன்களை அசம்பிள் செய்து அளித்து வருகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல் போனான ஐபோன் 13-ஐ சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், “இந்திய வாடிக்கையாளர்களுக்கு இங்கேயே ஐபோன் 13 மாடல் உற்பத்தியைத் தொடங்குவதற்கு உற்சாகமாக உள்ளது” என தெரிவித்துள்ளது.