சினிமா செய்திகள்
அட்லி -ஷாருக் படத்திலிருந்து பிரேக் எடுக்கும் நயன்தாரா.. எதற்கு தெரியுமா?
நயன்தாரா இப்போது மும்பையில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கானுடன் லயன் படத்தில் நடித்து வருகிறார்.
லயன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புனே நகரில் முடிவடைந்த நிலையில், மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஷாருக் கான் ஒரே நேரத்தில் அட்லி இயக்கி வரும் லயன் படம் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
ஏப்ரல் 18-ம் தேதி வரை ஷாருக் கானுடன் லயன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குப் படப்பிடிப்புகளிலிருந்து பிரேக் எடுக்கிறார்.
இந்த இரண்டு வாரங்களும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ப்ரமோஷன் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் ஷிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விக்னேஷ் ஷிவன் இயக்கி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா, சமந்தா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
பொதுவாக நயன்தாரா எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷனிலும் ஈடுபட மாட்டார். ஆனால் அவர் தயாரிக்கும் படத்தின் ப்ரமோஷனில் மட்டும் நயன்தாரா கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
இந்த செய்தி மூலம் அட்லியின் இந்தி படம் டிராப் இல்லை என்று பரவிய செய்திகளும் பொய் என்பது தெரியவந்துள்ளது.