கிரிக்கெட்
ஒரு நிமிடம் தாமதம் ஆகியிருந்தாலும் உயிர் போயிருக்கும்: கிரிக்கெட் வீரர் சாஹல் அதிர்ச்சி தகவல்!
ஒரு நிமிடம் தாமதமாக இருந்தாலும் தனது உயிர் போயிருக்கும் என கிரிக்கெட் வீரர்கள் சாஹல் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் சாஹல் தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய போது பெங்களூரில் ஒரு போட்டி நடந்தது. அந்த போட்டியின் போது நடந்த பார்ட்டி ஒன்றில் சக வீரர் ஒருவர் என்னை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். திடீரென பால்கனியில் இருந்து என்னை அப்படியே தூக்கி தொங்கவிட்டார். நாங்கள் அப்போது 15-வது மாடியிலிருந்தோம். குடிபோதையில் இருந்த அவர் என்னைவிட்டு இருந்தால் தலை சிதறி இறந்து போய் இருப்பேன்.
அந்த நேரத்தில் நான் கத்தியதை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. நான் உயிர் பிழைத்து விட்டேன் என்பதை ஒரு நிமிடம் நான் நம்பவேயில்லை. ஒரு சிறிய தவறு நடந்திருந்தால் கூட நான் கீழே விழுந்து இருப்பேன் என்று கூறினார்.
இந்த பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் தன்னை கொலை செய்யும் அளவுக்கு சென்ற அந்த வீரர் யார் என்பதை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.