சினிமா செய்திகள்
மாட்டு வண்டி பயணமும்.. கயித்துக் கட்டில் தூக்கத்தையும் அனுபவித்த அமிதாப்!
இந்தி, தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து நடித்து வரும் அமிதாப், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து, ஜூண்ட் எனப்படும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
புகழின் உச்சிக்கு சென்றுவிட்டாலே மனிதர்களால் எளிமையான வாழ்க்கையை வாழமுடியாது. அதிலும், பாலிவுட்டின் பிக் பி அமிதாபிற்கு எளிமையான வாழ்க்கை என்பதே எண்ணி பார்க்க முடியாத ஒன்று.
இந்தி, தெலுங்கு, தமிழ் என தொடர்ந்து நடித்து வரும் அமிதாப், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து, ஜூண்ட் எனப்படும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதில், கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கும் அமிதாப், கிராமத்தில் உள்ளவர்களுக்கு கால்பந்தாட்டத்தை கற்று தருகிறாராம்.
இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் அருகே உள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஓய்வு நேரங்களில், மாட்டு வண்டி பயணம், கயித்துக் கட்டி தூக்கம் மற்றும் டவுன் பஸ் பயணங்களில் அமிதாப் மக்களோடு உறவாடி வருகிறார்.
இது தனக்கு மிகுந்த நிறைவை தருவதாகவும் அமிதாப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.