Connect with us

தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைப்பழி: பரபரப்பில் தமிழகம்!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இந்த பரபரப்பு தகவல்களை நேற்று மதியம் டெல்லியில் வெளியிட்டார். இது அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாட்டில் நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றார்.

கொடநாடு எஸ்டேட்டில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைப்பற்றவே இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சதி அடங்கி இருக்கிறது. பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட சயோன் உள்ளிட்ட இருவரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.

அப்போது பேசிய அவர்கள், கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கியமான டாக்குமெண்டுகளை எடுக்க முதல்வர் பழனிசாமி 5 கோடி பணம் தருவதாக கனகராஜ் மூலமாக பேசியதாகவும், அதன் பின்னர் அந்த டாக்குமெண்டுகளை எடுத்துக்கொண்டு முதல்வர் பழனிச்சாமியிடம் கொடுக்க சென்ற டிரைவர் கனகராஜ் அடுத்த 5 நாட்களில் விபத்தில் மரணமடைந்தார்.

கனகராஜ் கொல்லப்பட்டதிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல அந்த 5 கோடி ரூபாயை கொடுக்கவில்லை. அதன் பின்னர் இந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றோம். இதில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளது என்றனர். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!