தமிழ்நாடு
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு தடை: குடிமகன்கள் ஜாலி!
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்கள் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களை ஆறுமாதங்களுக்கு மூடவேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகிஉள்ளது
டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது/ டாஸ்மாக் கடைகளின் அருகில் பார் நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடை இல்லை என்று கூறிய நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது
மேலும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுக்காத நிலையில் ஆறு மாதங்கள் மூட வேண்டும் என நீதிபதி தடை விதிக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் செய்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது