தமிழ்நாடு
மாநிலக்கல்வி கொள்கைக்காக புதிய குழு: விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 13 பேர்கள்
தமிழகத்தில் மாநிலக்கல்வி கொள்கைக்காக புதிதாக 13 பேர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஒரு சில மாநிலங்கள் பின்பற்றி வரும் நிலையில் அந்த கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றாது என ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் ஆன்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த குழுவில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், டி எம் கிருஷ்ணா உள்ளிட்ட பல்துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: