கிரிக்கெட்
ஷிவம் துபே எதுவும் கற்று கொள்ளவில்லை: 19வது ஓவர் குறித்து கவாஸ்கர்!
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது 19-வது ஓவரை வீச வந்த சிவம் துபே வீசிய மோசமான பந்துவீச்சு தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்த 211 என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது.
19-வது ஓவரை யார் வீசுவது என்ற குழப்பம் கேப்டன் ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிவம் துபே 19வது வீச முடிவு செய்யப்பட்டதும் அவரது முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டு பந்துகள் வைடு பந்துகளாக வீசப்பட்டது. அதன் பின் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் சென்றதால் அந்த ஒரு ஓவரில் மட்டுமே 25 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து 20வது ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு லக்னோ அணி வந்தது.
சிஎஸ்கே அணியின் 19வது ஓவர் குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது: ஷிவம் துபே மெதுவாக பந்துகளை வீசுகிறார். அந்த வகை பந்துகள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக கண்டிப்பாக இதுபோன்ற ஆடுகளங்களில் பந்து நேராக பேட்டிற்கு வரும். சிவம் துபே எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மெதுவான லெந்த் பந்துகளை வீசுகிறார் என்று கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.