இந்தியா
நீட் விண்ணப்பதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருத்தங்கள் செய்ய ஆன்லைனில் தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தேர்வு நடைபெறும் நகரம், நாடு உள்ளிட்ட விவரங்களை மட்டும் மாற்ற முடியாது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் மற்ற விவரங்களைக் திருத்த வேண்டுமானால் nbe.edu.in என்ற இணையதள முகவரியில் சென்று ஏப்ரல் 7-ம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
புகைப்படங்களை சரி செய்தல் உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கட்டணம் செலுத்தினால் மட்டுமே திருத்தங்கள் செய்யப்படும் என்பதையும் விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் திருத்தங்கள் செய்வதற்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என்றும் இதுவே கடைசி வாய்ப்பு என்றும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.