தமிழ்நாடு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைநிலை படிப்புக்கு மாணவர்கள் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில் சேர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு செல்லத்தக்கது அல்ல என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 – 2015 வரை மட்டுமே தொலைநிலை படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது
அங்கீகாரம் பெறாத படிப்புகளைப் படித்தால் உயர்நிலைக் கல்வியில் சேர முடியாது என்றும் வேலை வாய்ப்பும் கிடைக்காது என்றும் எனவே தொலைநிலை படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டாம் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது
மேலும் அங்கீகாரம் பெறாமல் எந்த உயர் கல்வி நிறுவனமும் தொலைநிலை திறந்தநிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.