ஆரோக்கியம்
நாவல் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்!
நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கியம் உள்ளது. வாய் துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுகள் நிறைந்துள்ளன. மேலும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ரைபோபிளவின், தயாமைன் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நாவல் மரத்தின் படையும் அதன் வேரும் வயிற்றுப்போக்குக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் இலையானது குமட்டல், எச்சில் அதிகமாக ஊறுதல், வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வாந்தி போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்பைக்குக் குறையும்.
நாவல் பழம் நீர்ழிவு நோயைக் கட்டுபடுத்துகிறது. மேலும், உடல் பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக்கொள்ள நாவல் பழத்தை உட்கொள்ளலாம்.