தமிழ்நாடு
பால், பஸ் கட்டணம் உயர்வு: விரைவில் அறிவிப்பு வரும் என அமைச்சர் தகவல்!
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்தது என்ற நிலையில் விரைவில் மருந்து பொருட்களின் விலைகள் உயர இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கேஸ், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தற்போது பால் மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அரசு ஊழியர்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் பால் விலை., பஸ் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என்றும் என்றும் பால் விலை பஸ் கட்டண மாற்றம் பற்றி முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து தமிழ்நாட்டில் விரைவில் பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது