சினிமா செய்திகள்
நடிகை மீராமிதுன் மீண்டும் கைது: இந்த முறை ஜாமின் கூட கிடைக்காதாம்?
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதுன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதே வழக்கிற்காக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை மீராமிதுன் பட்டியல் இனத்தவர் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இது பற்றி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தலைமறைவாகி இருந்த நிலையில் கேரளாவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் .
இதனை அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார் .
இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் கூட கிடைக்காது என்று கூறப்படுவதால் பாதிக்கப்பட்டுள்ளது.