தமிழ்நாடு
நேற்று வெளியிட்ட உத்தரவை இன்று வாபஸ் பெற்றது போக்குவரத்து கழகம்!
தமிழக அரசின் போக்குவரத்து கழகம் நேற்று ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்ட நிலையில் இன்று அந்த உத்தரவை வாபஸ் பெற்று விட்டதாக அறிவித்து உள்ளது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
நேற்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தது.
இந்த நிபந்தனைபயணிகளை மட்டுமின்றி டிரைவர் மற்றும் கண்டக்டர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு இன்று ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சைவ உணவு மட்டுமின்றி அசைவ உணவையும் சுகாதார முறையில் பயணிகளுக்கு வழங்கலாம் என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.