உலகம்
14 வயது சிறுவனுடன் 50 வயது ஆசிரியை தகாத உறவு: வீடு, கார், ஹோட்டலில் உல்லாசம்!
50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினோயிஸ் பகுதியை சேர்ந்த டைய்னா சிடெஸ்டெர் என்ற 50 வயதான ஆசிரியை ஒருவர் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வசித்த வீட்டின் அருகில் வசித்த 14 வயது சிறுவன் ஒருவனுடன் பழகியுள்ளார். இந்த தொடர்பில் இருவரும் ஒருவருக்கொருவர் நிர்வாண புகைப்படங்கை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து பாலியல் உறவு வைத்துக்கொண்ட இருவரும் பலமுறை ஆசிரியையின் வீடு, கார், உள்ளூர் ஹோட்டல் அறைகள் என பல இடங்களில் உடலுறவு கொண்டுள்ளனர். இவர்களின் இந்த தகாத உறவை கண்டுபிடித்த மர்ம நபர் ஒருவர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலிசார் டய்னாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
குற்றவியல் பாலியல் துஷ்பிரயோகம், சிறார் ஆபாச படங்களை பகிர்ந்து கொண்ட குற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் ஆசிரியை டய்னா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.