சினிமா செய்திகள்
நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த அல்லு அர்ஜுன்: என்ன காரணம்?
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்தில் நடிகை சமந்தாவுக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் சமீபத்தில் வெளியானது என்பது மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்தே
இந்த நிலையில் இந்த படத்தில் ‘ஓ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடியிருந்தார் என்பதும் அதற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’புஷ்பா’ இரண்டாம் பாகத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம் பெறுவதாகவும் அந்த பாடலுக்கும் சமந்தா தன்னை அழைப்பார்கள் என்று காத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது
ஆனால் சமந்தாவை அல்லு அர்ஜுன் அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த பாடலுக்கு நடனம் ஆட வைக்கலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது
முதல் பாகத்தில் சமந்தா ஆடுவதற்கு 5 கோடி சம்பளம் கேட்ட நிலையில் இரண்டாம் பாகத்தில் டான்ஸ் ஆட இரண்டு கோடி சம்பளத்திற்கு திஷா பதானி ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது