இந்தியா
ஊரடங்கு கட்டுப்பாடு முழுமையாக நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!
ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஒரு சில மாதங்கள் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது என்பதும் அதனால் கோடிக்கணக்கானோர் பெரும் சிக்கலில் இருந்தனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேர்கள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடலாம் என மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .