தமிழ்நாடு
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: சிலிண்டரை அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு!
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கடந்த 137 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் இந்தியாவில் மட்டும் ஒருசில காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.16 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து 92.19 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மூன்று மாதங்களுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது