Connect with us

தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் பயணம் செய்தால் ரூ.1 லட்சம் பரிசு: அசத்தல் அறிவிப்பு!

Published

on

சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகளுக்கு ரூ. 1 லட்சம்‌ மதிப்பிலான பரிசு கூப்பன்‌ அல்லது பரிசு பொருள்‌ வழங்கப்படும்‌ என்று சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌, மெட்ரோ இரயில்‌ சேவையை 54.11 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில்‌ விமான நிலையம்‌ மெட்ரோ முதல்‌ விம்கோ நகர்‌ பணிமனை மெட்ரோ இரயில்‌ நிலையம்‌ வரை மற்றும்‌ புரட்சித்தலைவர்‌ டாக்டர்‌. எம்‌.ஜி. ராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ முதல்‌ பரங்கிமலை மெட்ரோ நிலையம்‌ வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார்‌ 10.50 கோடி பயணிகள்‌ மெட்ரோ இரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌.

இதுவரை மெட்ரோ இரயில்‌ சேவைகளைப்‌ பயன்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும்‌ பயணிகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, பின்வரும்‌ அற்புதமான திட்டங்களை அறிவிப்பதில்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ மகிழ்ச்சி அடைகிறது. இந்த திட்டங்கள்‌, 21.03.2022 முதல்‌ அமலுக்கு வரும்‌.

1. ஒரு மாதத்தில்‌ அதிகபட்சமாக பயணம்‌ செய்யும்‌ முதல்‌ 1௦ பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌ இதுதவிர மேலும்‌ 3௦ நாட்களுக்கான விருப்பம்போல்‌ பயணம்‌ செய்வதற்கான பயண அட்டை (ரூ.2500: மற்றும்‌ ரூ.50- வைப்புத்தொகை மதிப்புள்ள வழங்கப்படும்‌

2. மாதம்‌ ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500- மற்றும்‌ அதற்கு மேல்‌ பணம்‌ செலுத்திய 10 பயணிகளைத்‌ தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக்‌ குலுக்கல்‌ நடத்தப்படும்‌. அதில்‌ பயணிகளுக்கு தலா ரூ.3,000- மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌

3. சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ பயண அட்டை வாங்கிய பயணிகளைத்‌ தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக்‌ குலுக்கல்‌ நடத்தப்படும்‌. மேலும்‌, இதில்‌ குறைந்தபட்சத்‌ தொகையான ரூ.500-க்கு டாப்‌ அப்‌ செய்திருந்தால்‌ ரூ.1,450- மதிப்புள்ள இலவச டாப்‌ அப்‌ மற்றும்‌ ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன்‌ அல்லது பொருள்‌ வழங்கப்படும்‌.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள்‌, பயணிகளை ஊக்குவிக்கவும்‌, பயனளிக்கவும்‌ சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிகள்‌ தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும்‌.
இந்த பரிசு விவரங்களை மேலும்‌ தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில்‌ நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம்‌.

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்14 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!