தமிழ்நாடு
திமுக அலுவலக திறப்பு விழாவை பாஜக எதிர்ப்பு விழாவாக மாற்ற ஸ்டாலின் திட்டம்?
டெல்லியில் ஏப்ரல் 2ஆம் தேதி அண்ணா அறிவாலயம் என்ற திமுக அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவை வெறும் அலுவலக திறப்பு விழாவாக மட்டுமின்றி பாஜக எதிர்ப்பு விழாவாக கொண்டாட திமுக தலைவர் மு க ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விழாவுக்கு பாஜகவை தவிர அந்த கட்சிக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருவதாகவும் ஏற்கனவே இந்த விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகை தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் அகில இந்திய அளவில் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்க்கும் விழாவாக இந்த விழாவை நடத்த வேண்டும் என்று மு க ஸ்டாலின் கூறியிருப்பதாக தெரிகிறது.
பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் இந்த விழாவிற்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பை டிஆர் பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவரிடமும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒப்படைத்து உள்ளதாகவும் அவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முக்கிய தலைவர்களை சந்தித்து இந்த விழாவுக்கு வருகை அதன்படி அழைப்பு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எந்தெந்த தலைவர்கள் விழாவுக்கு வர ஒப்புக் கொண்டார்கள் என்பதை பொருத்தே அழைப்பிதழ் அடிக்கப்படும் என்றும் இந்த விழா, திமுக அலுவலக திறப்பு விழாவாக மட்டுமின்றி பாஜகவுக்கு எதிராக ஒரு தேசிய அணி திரளும் விழாவாக இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.