உலகம்
பந்த்தில் போராட்டம்.. சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம்
டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம் இன்று மாலை வரை நடைபெறும்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது. 300க்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கிண்டி ரயில் நிலையத்திற்குள் புகுந்த இவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியலால் கிண்டியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில்கள் தாமதம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு போராடி வரும் தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.