Connect with us

தமிழ்நாடு

தேர்தலில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா: 15 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் தீர்மானங்கள்!

Published

on

தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெறக்கூடிய மிதமிஞ்சிய பணப்பட்டுவாடாக்களை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையங்களை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள், தலைமையில் இன்று (17.03.2022) வியாழன் கிழமை சென்னை – குவாலிட்டி இன் (சபரி) ஹோட்டலில் நடைபெற்றtஹு.

இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமாஜ்வாடி கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் , இந்து மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, தமிழ் தன்னுரிமை இயக்கம் ஆகிய 15 கட்சிகள் கலந்து கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதருடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையோடு சுருங்கி விடுவதில்லை. அது தங்களுக்கான ஒரு அரசை தாங்களே சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதே. எவ்விதமான வெளித்தூண்டுதல்களுக்கும் ஆளாகாமல் வாக்குரிமை பெறப்பட்ட அனைவரும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தேசங்களிலும் கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறையாகும்.

எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மை அடக்கி ஆண்ட நிலைகளை மாற்றி, நம்மை நாமே ஆண்டுகொள்வதற்காக, ஏறக்குறைய 200 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தியே அந்த வாக்குரிமைச் சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காக நாம் அதிக விலை கொடுத்து இருக்கிறோம். பலரது உயிர்த் தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த வாக்குரிமையை அண்மைக்காலமாக தமிழகத்தில் காசு, பணம், பரிசுப் பொருட்கள் என ஆசை வார்த்தைகள் காட்டி அபகரிக்கும் ஆபத்தான போக்குகள் அதிகரித்துவிட்டன.

மக்களிடம் கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி வாக்குகளைப் பெற்று மக்களுக்கு பணியாற்றும் இடத்திற்கு வர முடியும் என்ற நிலைகளைகளை எல்லாம் அடியோடு அழித்தொழித்து கோடி கோடியாகப் பணத்தை வாரி இரைக்கக்கூடியவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சூழலும், வாக்காளர்களுக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் கொடுத்து அவர்களை ஊழல் படுத்தி, அவர்களது மனங்களை மாற்றி வாக்குகளை பெறும் அவல நிலையும் உருவாகியிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் ஒளிந்தும் மறைந்தும் மூலைமுடுக்குகளில் வாக்குக்கு பணம் கொடுக்க தொடங்கிய அத்தொற்று இப்பொழுது நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் தொற்றாகப் பரவி இருக்கிறது. வாக்காளர்களே விரும்பாவிட்டாலும் அவர்களுடைய கைகளிலும், பைகளிலும் வலிந்து காசுபணங்களை, பரிசுப் பொருட்களைத் திணித்து அவர்களுடைய மனங்களை மாற்றியதால், இப்பொழுது வாக்காளர்களே வாக்களிக்க அரசியல் கட்சிகளிடம் பணம் கேட்டு பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 50 முதல் 100 கோடி, சட்டமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 25 முதல் 50 கோடி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் ரூபாய் 5 முதல் 10 கோடி என செலவழிக்க வாய்ப்புள்ள புதிய நிலப்பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள், அரசியலால் முதலாளிகள் ஆனவர்கள் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்; வெற்றி பெற முடியும் என்ற நிலைகள் உருவாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டுக்கு ரூபாய் 2 கோடி முதல் 10 கோடி வரையிலும் பணம், ஹாட் பாக்ஸ்கள், கொலுசுகள், டோக்கன்கள் என இன்னும் வேறு பல விதங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையங்கள் எப்படியாவது அந்த குறிப்பிட்ட தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, தேர்தல்கள் ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இதைவிட ஜனநாயகத்திற்கு கேடானது, தீங்கானது வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, இனி எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையமும் மிக விரிவான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும்; தமிழகம், டெல்லியில் போராட்டம் நடத்தவும்; ’வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்ற கருத்தை இயக்கமாக கொண்டு செல்லவும்; பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க மே மாதம் முதல் தமிழகத்தில் முதற்கட்டமாக 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்படுகிறது.

 

author avatar
seithichurul
சினிமா7 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்7 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்7 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!