கிரிக்கெட்
மீண்டும் ஐபிஎல்-க்கு வருகிறார் வாட்சன்: எந்த அணியில் தெரியுமா?
பிரபல கிரிக்கெட் வீரர் வாட்சன் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார் என்பதும் இவர் நன்றாக பேட்டிங் செய்த அனைத்து போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போதிலும் வாட்சன் இல்லாததை பல நேரங்களில் உணர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ரீஎன்ட்ரி ஆக உள்ளார். ஆனால் அதே நேரத்தில் அவர் விளையாட்டு வீரராக இல்லாமல் உதவி பயிற்சியாளராக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக வாட்சன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி அறிவித்துள்ளது.